அரையிறுதிக்குள் நுழைந்தது யாழ்.பல்கலைக்கழகம்!

Thursday, July 5th, 2018

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரையிறுதிக்கு யாழ்.பல்கலைக்கழகம் உள்நுழைந்தது.
தற்போது 50 ஓவர்களைக் கொண்ட சுற்றுப்போட்டியானது நடைபெற்று வருகின்றது. இந்தச் சுற்றுப்போட்டியின் காலிறுதிப் போட்டியொன்று பெரதெனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதில் வயம்ப பல்கலைக்கழக அணியை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அணி மோதியது.
நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கி 48.1 ஓவர்களில் 139 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் நிதர்சன் 41, துவாரகசீலன் 19, தாரக 19, தனுஸன் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் வயம்ப அணி சார்பாக, ஏ.டில்சான் 5 விக்கெட்களையும், நுவான், பெர்னாண்டோ, நுவான், கவிந்த, மதுசானக்க தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
140 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய வயம்ப பல்கலைக்கழக அணி, 43.5 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருந்த போது, மழை குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது.
போட்டியை தொடர்ந்து நடத்த முடியாமையால், பரபோலா முறைப்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
துடுப்பாட்டத்தில் சமுத் 22, லயன் 22, கவிந்த 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி சார்பாக, லோகதீஸ்வரன் 4 விக்கெட்களையும், துவாரகசீலன், சானக்க தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து நடைபெறும் அரையிறுதியில் கொழும்பு பல்கலைக்கழக அணியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி மோதவுள்ளது.

Related posts: