அதிவேக அரை சதம்: மந்தானா சாதனை!

Tuesday, July 31st, 2018

இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் டி 20 கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனையை சமன் செய்தார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தானா.

டான்டனில் கியா சூப்பர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வெஸ்டர்ன் ஸ்டராம்-லொபொர்க் லைட்னிங் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் வெஸ்டர்ன் ஸ்டராம் அணிக்காக ஆடிய மந்தானா 4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன், 19 பந்துகளில் 52 ரன்களை அடித்து சாதனை படைத்தார்.

இதன் மூலம் ஏற்கெனவே இந்தியாவுக்கு எதிரான டி 20 சர்வதேச ஆட்டத்தில் நியூஸிலாந்தின் சோபி டிவின்ஸ் அடித்த 18 ரன்களில் 50 ரன்கள் சாதனையை சமன் செய்தார். 6 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து வெஸ்டர்ன் அணி 85 ரன்களை எடுத்தது. டெவின்ஸ் அணி 6 ஓவர்களில் 67 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மழையால் ஆட்டம் தடைபட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டன.

Related posts: