5 பவுண்ட் நோட்டுக்கு  ரூ.1.50 கோடி!  

Monday, October 17th, 2016

பிரித்தானிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வைத்துள்ள 5 பவுண்ட் தாளை eBay இணையத்தளம் மூலமாக ரூ.1.50 கோடிக்கு வாங்க கடும் போட்டி நிலவி வருகிறது.

இங்கிலாந்தில் உள்ள Twinckenham நகரில் காரத் ரைட் என்ற நபர் வசித்து வருகிறார். இந்நிலையில், இந்நபருக்கு 5 பவுண்ட் தாள் ஒன்று கிடைத்துள்ளது. இதனை எதேச்சையாக பார்த்தபோது அதில் ஒரு விஷேசம் இருந்ததை கண்டு வியந்துள்ளார்.

உடனடியாக அந்த தாளை eBay இணையத்தளத்தில் விற்பனைக்கு விளம்பரம் வெளியிட்டுள்ளார். நபர் விளம்பரத்தை பார்த்த ஆயிரக்கணக்கான நபர்கள் அந்த விஷேசமான பவுண்ட் தாளை வாங்க போட்டி போட்டு வருகின்றனர்.

விளம்பரம் வெளியான நேரத்தில் இருந்து அந்த தாளின் விலை தற்போது 80,100 பவுண்டுக்கும் மேல்(1,43,36,426 இலங்கை ரூபாய்) வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக உள்ளனர்.

இவ்வளவு மதிப்பு வாய்ந்த அந்த பவுண்ட் தாளில் என்ன விஷேசம் இருக்கிறது? ஒவ்வொரு தாளுக்கும் ஒரு சீரியல் எண் இருக்கும். ஆனால், இந்த 5 பவுண்ட் தாளில் அச்சிடப்பட்டுள்ள சீரியல் எண் தான் இவ்வளவு விலைக்கு காரணம்.

அதாவது, இயந்திர துப்பாக்கியை குறிக்கும் Ak47 என்ற எண்கள் இடம்பெற்று இருப்பது தான் இந்த விஷேசத்திற்கு காரணம் என வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து காரத் ரைட் பேசியபோது, ‘இந்த 5 பவுண்ட் தாள் இவ்வளவு விலைக்கு விற்கப்படும் என எண்ணவில்லை. ஆனால், இவர்களில் சிலர் போலியாக கூட இருக்கலாம்.

பவுண்ட் தாளின் இறுதி விற்பனை இன்னும் சில மணி நேரங்களில் முடிந்து விடும் என்பதால், இதன் உண்மையான விலையும் தெரிந்து விடும்.

எனினும், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டது போல் 80,100 பவுண்டுக்கு அந்த தாள் விற்பனையானால் தனது தாயாருக்கு ஒரு தனி வீடு ஒன்று வாங்கி கொடுக்க உள்ளதாக காரத் ரைட் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

pound_001.w245

Related posts: