மறதியால் 20 ஆண்டுகளாக சொந்த காரை தேடிய நபர்!

Saturday, November 18th, 2017

ஜேர்மனியில் நபர் ஒருவர் தமது கார் நிறுத்திய இடத்தை மறந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டெடுத்துள்ளார்.ஜேர்மனியின் Frankfurt நகரில் உள்ள கேரேஜ் ஒன்றில் குறித்த நபர் கடந்த 1997 ஆம் ஆண்டு தமது காரை நிறுத்தியுள்ளார்.

தற்போது 76 வயதாகும் குறித்த நபரின் வாகன சாரதி அங்குள்ள தொழிற்பேட்டை ஒன்றில் இவரது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.ஆனால் குறிப்பிட்ட நபர் வாகனம் நிறுத்திய பகுதியை மறந்துள்ளார். அப்பகுதி முழுமையும் தேடியும் இவர்களால் அந்த வாகனத்தை மீட்க முடியவில்லை.

இதனையடுத்து வாகனம் தொலைந்ததாக கூறி பொலிசாருக்கும் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார் அவர்.இந்த நிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்புடைய கேரேஜ் கட்டிடத்தை இடிக்கும் பொருட்டு கட்டுமான பணியாளர்கள் சோதனையிட்ட போது, அங்கு வாகனம் ஒன்று சிதைந்த நிலையில் காணப்பட்டதை கண்டறிந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.வாகனத்தை சோதனையிட்ட பொலிசார், தங்களுக்கு வந்துள்ள புகாரின் அடிப்படையில் குறித்த நபரை தொடர்பு கொண்டுள்ளனர்.ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பு ஏதும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளதால் தற்போது அந்த கார் பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் இல்லை என கூறப்படுகிறது.

Related posts: