பூமியை விட்டு விலகும் நிலா – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

பூமியிலிருந்து நிலாவானது ஒவ்வொரு ஆண்டும் விலகிச்செல்வதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலொன்றினை வெளியிட்டுள்ளனர்.
பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச்செல்வதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறு பூமியை விட்டு நிலா விலகி செல்வதனால் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூமிக்கு நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுவதால், பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலா தோன்றிய போது 14 ஆயிரம் மைல் தொலைவில் பூமிக்கு மிக அருகில் இருந்ததாகவும் தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரம் விலகிச்சென்றுள்ளதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
தினமும் 25 நிமிடங்கள் நடந்தால் புற்று நோயில் இருந்து தப்பிக்கலாம்!
நிலநடுக்கத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் செயலி!
செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பியது நாசா!
|
|