பூமியுடன் மோதப்போகும் இராட்சத விண்வெளி நிலையம்!

Tuesday, October 17th, 2017

சீன நாட்டுக்குச் சொந்தமான டியாங்கோங் – 1 என்ற இராட்சத விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது மோதலாம் என சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு சீனாவானது ரஷ்யா மற்றும்இ அமெரிக்காவிற்கு போட்டியாக மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது.

சுமார் 8.5 தொன் எடைகொண்ட குறித்த விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது 2016 ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டையும் முற்றாக இழந்துவிட்டதாகவும் அது 2017 இறுதியில் அல்லது 2018 ஆரம்பத்தில் பூமியின் மீது மோதும் வாய்ப்பு உள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் சபையிடம் சீனா தெரிவித்திருந்தது.அதனைத் தொடர்ந்து விண்ணில் சுற்றித்திரிந்த டியாங்கோங் – 1 ஆராய்ச்சி நிலையத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீன விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில் எதிர்வரும் மாதத்திற்குள் டியாங்கோங் – 1 பூமியுடன் மோதி அழிவுக்குள்ளாகும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.மணிக்கு சுமார் 27000 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் டியாங்கோங் – 1 ஆராய்ச்சி நிலையம்இ பூமியின் வளிமண்டளத்திற்குள் நுழையும் போது எரியத் தொடங்கிவிடும்.எனினும் முற்றாக எரியாத நிலையில் பெரும்பாலான பகுதிகள் பூமியில் மோதக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.தற்போதைய செய்திகளின் படி டியாங்கோங் – 1 பூமியுடன் மோதப்போகும் இடம் தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பிலும் மேலதிக தகவல்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.

Related posts: