நிலவுக்கு பயணிக்க முன்பணம் செலுத்திய இருவர்!
Wednesday, March 1st, 2017
நிலவுக்குப் பயணம் செய்ய இரண்டு அமெரிக்க தனி நபர்கள் கட்டணம் செலுத்தியுள்ளதாக, அமெரிக்க எரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்வெளி பயணம் மூலம் 45 ஆண்டுகளில் முதல்முறையாக மனிதர்கள் நிலவுக்குப் பயணிக்க உள்ளனர்.
இந்தப் பயணத்திற்கு, பெயர் வெளியிடாத இரண்டு பேர் குறிப்பிடத்தக்க வைப்புத்தொகையை செலுத்திவிட்டதாகவும், அவர்கள் முழு மனித குலத்தின் நம்பிக்கைகளையும், கனவுகளையும் சுமந்து செல்வார்கள் என்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் முஸ்க் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வழங்கும் ஒத்துழைப்புதான், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூற்றை உருவாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
வருகிறது புதிய டொயோட்டா இன்னோவா!
உலகின் முதல் பிரமிடு கண்டுபிடிப்பு!
டைட்டன் நிலவினை நோக்கி இராட்சத ட்ரோன் விமானத்தை அனுப்பும் நாசா!
|
|