நேதாஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டாரா?
Saturday, January 7th, 2017இங்கிலாந்து இராணுவ விசாரணையின் போதே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார் என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி பக்ஷி “Bose: The Indian Samurai – Netaji and the INA Military Assessment” என்ற புத்ததகத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் தொடர்பாக மர்மங்கள் நீடித்து வருகின்றது, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி மரணமடைந்ததாக கூறப்பட்டாலும், தற்போது புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி பக்ஷி “Bose: The Indian Samurai – Netaji and the INA Military Assessment” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதில், இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மன் குண்டுவீச்சில் தப்பிய நேதாஜி சைபீரியாவில் முகாம் அமைத்தார், அங்கு 3 வானொலி நிலையங்களையும் நேதாஜி அமைச்சார், இத்தகவலை இங்கிலாந்து இராணுவம் அறிந்து கொண்டது. ரஷ்யாவின் உதவியுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் இங்கிலாந்து இராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்திய போது சித்ரவதை செய்து கொல்லப்பட்டார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|