செவ்வாய்-வெள்ளிக் கிரகங்கள் அருகருகே தோன்றும் வானியல் அதிசயம் இன்று!
Tuesday, July 13th, 2021வான் மண்டலத்தில் அரிய நிகழ்வாக செவ்வாய், வெள்ளிக் கிரகங்கள் இன்று அருகருகே தோன்றுகின்றன. இந்த அற்புதக் காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம்.
வெறும் கண்களால் பார்த்து ரசித்து மகிழ்வதற்கு ஓர் அற்புத வானியல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.
அதாவது, பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தை ஒட்டியே கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கோளுக்கும் இடைப்பட்ட தூரம் மாறுபடும். அவ்வாறு தத்தமது பாதைகளில் கோள்கள் பயணித்துக் கொண்டிருக்கும்போது பூமிக்கு அருகிலுள்ள கோள் தொலைவிலுள்ள கோளை முந்திச் செல்வது போல் இருக்கும்.
அந்த நேரத்தில் அந்த இரு கோள்களும் அருகருகே இருப்பது போல் தெரியும். இன்று மாலையில் வெள்ளிக் கோளும், மிகத் தொலைவில் இருக்கும் செவ்வாய்க் கோளும் அருகருகே இருப்பது போல் தெரியும். அப்போது அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் ஒரு பாகையை விடக் குறைவாக இருக்கும்.
இன்றைய தினம் மாலையில் சூரியன் மறைந்த பின் வீடுகளின் மொட்டை மாடியில் நின்றவாறு மேற்குத் திசையை உற்று நோக்கினால் அங்கு ஒளி பொருந்திய வெள்ளிக்கோள் தெரியும். தொலைதூரத்தில் இருக்கும் செவ்வாய்க் கோள் ஒளி குறைவாக வெள்ளிக் கோளுக்கு அருகிலேயே இருப்பது போல் தெரியும். இந்த அற்புத காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|