குளிரூட்டி வசதியைக் கொண்ட ஓட்டோ அறிமுகம்!

Saturday, June 23rd, 2018

மீன், பால் மற்றும் காய்கறி வகைகளை எடுத்துச் செல்லும்போது பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்காக குளிரூட்டி வசதியைக் கொண்ட ஓட்டோக்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியியல் வள கிராமிய பொருளாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராய்ச்சி நடத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் பேச்சின் போது குறிப்பிட்ட பொருள்களை ஏற்றிச் செல்லும் போது இவற்றின் தரத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை மேற்கொள்ளுவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குளிரூட்டி வசதியைக் கொண்ட ஓட்டோக்களை கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் போது அவற்றுக்கான கடன் வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராய்ச்சி கூறியுள்ளார்.

Related posts: