கம்பளிப்பூச்சி சூழல்  மாசடைவதை கட்டுப்படுத்தும் – ஆய்வில் தகவல்!

Wednesday, April 26th, 2017

பிளாஸ்டிக்கை அரிக்கக்கூடிய கம்பளிப்பூச்சி உள்ளிட்ட சில உயிரினங்களை பயன்படுத்தி சூழல் மாசடைதலைக் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேன்கூடுகளின் மெழுகை உண்ணும் விட்டில் பூச்சியின் புழுக்கள் பிளாஸ்டிக்கை அழிக்கக்கூடியவை என கேம்பிரிஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த பூச்சியினங்கள் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயன பிணைப்புக்களை இலகுவாக உடைக்கக்கூடியவை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் ஒவ்வொரு வருடத்திலும் 80 மில்லியன் டொன்கள் பிளாஸ்ட்டிக் பொலித்தீன் உற்பத்தி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த பிளாஸ்டிக் பொலித்தீன் வகைகள் பொலித்தீன் பைகள் மற்றும் உணவுப் பொதிகள் போன்றவற்றின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதுடன் இவை முற்றாக உக்குவதற்கு பல நூற்றாண்டு காலம் செல்கின்றது.

இருப்பினும் விட்டில் பூச்சிகளின் புழுக்கள் சுமார் 1 மணித்தியாலத்திற்குள் பிளாஸ்டிக் பையில் துளைகளை உருவாக்கி விடுகின்றன. இந்த செயற்பாட்டை மேலும் நுணுக்கமாக ஆராய்ந்து பிளாஸ்டிக் கழிவுகளால் உலகில் நிலவும் சிக்கலை குறைப்பதற்கான தொழிலுநுட்பத் தீர்வை வழங்க தாம் தயாராகவுள்ளதாக ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் பிளாஸ்டிக்கின் இயற்கை பிரிந்தழிகையின் பின்னணியில் உள்ள இரகசியங்களை கண்டறிந்து அந்த செயன்முறையை துரிதப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.

Related posts: