எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்!
Wednesday, August 17th, 2016
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்ற ஜயந்தி குரே உத்தும்பாலவுக்கு பரிசாக விளம்பர தூதுவர் பதவியொன்றை வழங்க, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, பெண்கள் உரிமையை பாதுகாப்போம் தொடர்பான வருடத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்க, குறித்த அமைச்சு நடவடிக்கை எழுத்துள்ளது. அவருக்கான தூதுவர் பதவி, எதிர்வரும் 19ஆம் திகதி வழங்கப்படும். 2016.08.19 முதல் 2017.05.17 வரையான காலப்பகுதியில், இவர் விளம்பரத் தூதுவராக செயற்படுவார் என்றும் இந்த அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
நாம் வாழ்வது எதிர்காலத்திலா?
மூளையின் செயற்பாடுகளை பதிவு செய்ய வந்தவிட்டது அதி நவீன கருவி!
அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமி பாதுகாப்பாக இருக்கும்; நாசா தகவல்!
|
|