ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்கும் ரோபோ!

Sunday, January 28th, 2018

ஸ்பெயின் நிபுணர்கள் ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்கும் ரோபோக்களை கண்டுபிடித்துள்ளனர்.

எந்திர மனிதர்கள் எனப்படும் ரோபோக்கள் உலகில் அனைத்து பணிகளையும் செய்வதற்கு உருவாக்கப்படுகிறது. ரோபோக்கள் மனிதன் செய்யும் பணியை வேகமாகவும், இலகுவாகவும் செய்யும் திறமை கொண்டது. பல்வேறு துறையில் திறமையை  வெளிக்காட்டும் ரோபோக்களை ஊழல் துறையில் இணைப்பதற்கும் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் உள்ள வல்லா போலித் எனும் பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஊழல் மோசடியைகண்டுபிடிக்கும் ரோபோக்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. ஊழல் மோசடிக்கு எதிரான ரோபோவிடம் நிறுவனத்தின் பெயரைகூறினால் அந்த நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ஊழல் மோசடிகளை கூறும் திறமை காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: