ஈஃபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டது!

Sunday, February 11th, 2018

பாரிஸ் நகரின் அடையாளமாகத் திகழும் ஈஃபிள் கோபுரம் (Eiffel Tower), பனிப்பொழிவு காரணமாக கடந்த 6 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதுடன் நாளை(11) வரை மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1887 ஆம் ஆண்டில் இருந்து எப்போதும் இல்லாத அளவிற்கு 12 சென்டிமீட்டர் உயரத்திற்கு பனி கொட்டிக்காணப்படுகிறது.

ஈஃபிள் கோபுரத்தைப் பார்வையிட வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் வழுக்கி வீழும் அபாயம் காணப்படுவதால், அதனைத் தற்காலிகமாக மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: