ஆப்பிள் கடிகாரம் அணிய பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை!

Saturday, May 26th, 2018

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள கைக்கடிகாரத்தை அணிய, கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

கிரிக்கெட் மைதானத்துக்குள் கைப்பேசி, வாக்கி டாக்கி, உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டு செல்ல வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இந்த முறை, சர்வதேச போட்டிகள் முதல் ஐ.பி.எல் தொடரிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கைகளில் ஆப்பிள் கைக்கடிகாரத்தை கட்டியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த கைக்கடிகாரத்தின் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள், ஆப்பிள் கைக்கடிகாரத்தை அணிய வீரர்களுக்கு தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இதுகுறித்து கூறுகையில், ‘ஊழல் தடுப்பு அதிகாரிகள், கைக்கடிகாரம் அணியக் கூடாது என்று கூறினார்கள். இதனால் இனி மைதானத்துக்குள் அணிய மாட்டோம்’என தெரிவித்துள்ளார்.

Related posts: