X-Press Pearl கப்பல் தீக்கிரை – இலங்கையின் கடற்பரப்பில் உள்ள பல அலங்கார மீன் இனங்கள் முற்றாக அழிந்துள்ளதாக நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுவில் தகவல்!

Tuesday, December 26th, 2023

X-Press Pearl கப்பல் தீக்கிரையானதன் காரணமாக இலங்கையின் கடற்பரப்பில் உள்ள பல அலங்கார மீன் இனங்கள் முற்றாக அழிந்துபோயுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுவில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் மான்னப்பெரும இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கப்பலில் இருந்த நச்சுக் கழிவுகளால் அலங்கார மீன்களின் நிறப்பான்மைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தேவைப்படுவதன் காரணமாக அமைச்சரவையின் அனுமதியைப் பெறுமாறு வீடமைப்பு மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு குழு பரிந்துரைத்துள்ளது.

குறித்த பரிந்துரைக்கு அமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: