O/L மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைவழங்குவதற்கு விசேட சேவை!
Thursday, November 24th, 2016
எதிர்வரும் 26 ஆம் 2016 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொடுப்பதற்காக விசேட ஒருநாள் சேவையொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய அன்றையதினம் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் இந்த விசேட சேவை வழங்கப்படவுள்ளது. அத்துடன் சாதாரண தர மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகள் தொடர்பான விபரங்களை ஆட்பதிவுத் திணைக்களத்தின் 011 2 862217 ,011 2 862217, மற்றும் 011 2 862228 , 011 2 862228, ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
அமைச்சருடன் தடுமாறிய விமானி : மயிரிழையில் தப்பினார் மகிந்த அமரவீர!
சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும் – ஜனாதிபதி!
நாளை திறைசேரி உத்தரவாதம் வழங்கினால் இரண்டு நாட்களில் வர்த்தமானி வெளியிடப்படும் என தகவல்!
|
|