O/L மாணவர்களுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்!
Wednesday, September 19th, 2018
இவ் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில் 80 வீதமானோருக்கு தேசிய அடையாளஅட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைத்த விண்ணங்களுக்கு அமைய, விநியோகிக்கப்படாத அடையாள அட்கைள் இம்மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.
மேலும், சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ள சுமார் 3,50,000 மாணவர்கள் அடையாளஅட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சமுர்த்திப் பயனாளிகள் தொடர்பில் கணக்கெடுப்பு!
நீர்ப்பாவனைக்கு சட்டம் வேண்டும் - பொறியியலாளர் சர்வராஜ் கோரிக்கை!
யாழ்ப்பாணம் மாவட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியம் - பொதுமக்களிடம் யா...
|
|