COVID-19 வைரஸ் எதிரொலி: மக்காவிற்கு செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்!
Thursday, February 27th, 2020
சவுதி அரேபிய அரசாங்கம், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு முழுவதும் COVID-19 வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான வீசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
உம்ராவுக்காக சௌதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சௌதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம்.
COVID-19 வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு வீசாக்கள் வழங்கபடமாட்டா என்று சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
Related posts:
தற்காப்பிற்காக ஜப்பானில் பயிற்சி!
இந்திய கடனை இலங்கை ரூபாவில் மீள செலுத்துவதற்கு இணக்கம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் ஏற்படுத்தப்பட்ட சேத விபரங்கள் தொடர்பான வி...
|
|
|


