தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விதித்துள்ள புதிய தீர்மானம்!

Wednesday, November 30th, 2022

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாகச் செல்லும் பொது போக்குவரத்து பேருந்துகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய தீர்மானத்தை விதித்துள்ளது.

அதன்படி அதிவேகமாகச் செல்லும் பேருந்துகள் தொடர்பில் அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய 24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது

Related posts: