9 மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்!

Wednesday, March 7th, 2018

நாடளாவிய ரீதியில் இன்று சுகாதார திணைக்களத்துடன் இணைந்த அனைத்து சாரதிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுகாதார திணைக்களத்துடன் இணைந்த சாரதிகளை வேறு திணைக்களங்களுக்கு மாற்றுவதற்குஎதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகளே அதிகளவில் இவ்வாறு இடமாற்றப்படுவதாகவும் 9 மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகள்இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாகவும் அகில இலங்கை சுகாதார சாரதிகள் சங்கத்தின் தலைவர் பிரதீப் நிஷாந்த சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாட்டில் நிலவும் அவசரகால நிலையை கருத்திற்கொண்டு, அவசர தேவைகளுக்கு உதவிபுரிய தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts:


கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு - மூன்றாவது நாழும் முற்றாக முடங்கிய நில...
டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரிப்பு - இதுவரை 24,523 பேர் பாதிப்பு என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் ப...
எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையே மீண்டும் இரவு நேர தபால் ரயில் சேவ...