67 தாதியர்களை பயிற்சிக்கால உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை!
Wednesday, April 11th, 2018
வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு 67 தாதியர்களை பயிற்சிக்கால உத்தியோகத்தர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது பற்றி மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சிகளை நிறைவு செய்து நியமனத்துக்காக தாதிய மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் அதிகளவான தாதியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆகவே தேவையின் நிமித்தம் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு நியமனம் கிடைக்கும் வரை 6 மாத கால பயிற்சிக் கால கொடுப்பனவுகளை வழங்கி சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டணம் திருத்தம் நாடாளுமன்றில்!
அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என சிங்கப்பூருக்கு விளக்கக்குறிப்பொன்று சட்டமா அதி...
இரண்டு அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!
|
|