50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரிமுதல் ஏப்ரல்வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளன!

Wednesday, February 21st, 2024

சீன சுற்றுலாப்  பயணிகளுடன்  50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி சில கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலும், மேலும் சில கப்பல்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் நங்கூரமிடவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வருடம் பெப்ரவரி 16ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 350,000ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு - மூன்றாவது நாழும் முற்றாக முடங்கிய நில...
தேர்தலுக்கு செலவிடும் பணத்தை மக்களது பட்டினியை போக்க செலவிடுங்கள் - சுயாதீன பொருளாதார ஆய்வாளர்கள் கோ...
பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது - சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் அழைப்பாளர் சானக்க தர்மவ...