5 மாதங்களுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும் – மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காணமுடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சீ.என்என் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் – இலங்கையிடம் தெளிவான திட்டம் மற்றும் தெளிவான பாதை உள்ளது. அதனை பின்பற்றுவதன் ஊடாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிர்வரும் 5 மாதங்களில் தீர்வு காண முடியும்.
அதுவரை கடினமாக காலமாக அமையும். எவ்வாறாயினும், ஒளியை காணக்கூடிய சுரங்கத்தின் விளிம்பினை அடைந்துள்ளோம்.
எனவே, மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இம்மாதம் இம்மாதம் 21ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை !
இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக ரணில் ஜெயவர்தன நியமனம்!
முன்னாயத்த நடவடிக்கைக்காக ஏனைய சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோம் - யாழ் ...
|
|