5 ஆம் திகதிமுதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்!

Monday, July 3rd, 2017

சைட்டம் தொடர்பாக அரசு இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் இம்மாதம் 5 ஆம் திகதிமுதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சங்கத்தின் மத்தியசெயற்குழுக் கூட்டம் இன்றையதினம் கூடியிருந்த நிலையிலேயே மேற்படி முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சைட்டம் தொடர்பான பிரச்சினைதொடர்பில் அரசு உரிய நடவடிக்கையினை இதுவரையில் எடுக்காத நிலையிலேயே தாம் இவ்வாறானதொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையேஅரசுஉரியநடவடிக்கைஎடுக்காதநிலையில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடருமென்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: