30 ஆயிரம் வேலை வாய்ப்புக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து
Friday, May 6th, 2016
வைத்தியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்காக 30 ஆயிரம் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை இணைத்துக்கொள்வதற்கான ஒப்பந்தமொன்றை இலங்கை அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு பதிவு பணியகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகங்களிடையே இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் ஒப்பந்தமானது 5 வருடகாலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இலங்கை சார்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் செயலாளர் ஜி.எஸ். விதானகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாதியர்கள் இணைக்கப்படுபவர்கள் 3 வருடகால சேவை ஒப்பந்தத்திற்குள் இணைக்கப்படுவதுடன் முதலாவது குழு வெகுவிரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் அவர்களுக்குரிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஒருபோதும் தனியார் மயமாகாது - அமைச்சர் கபிர் ஹாசிம்!
வறிய மக்கள் உழைப்பை சுரண்டும் நிதி நிறுவனங்கள் - வாழ்வின் எழுச்சித் திட்ட பணிப்பாளர் சுட்டிக்காட்டு!
கொரோனா நோயாளர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர்!
|
|
|


