3 மாதங்களுக்குள் உயர்தர மாணவருக்கு “ரப்” வழங்க திட்டம்!
Thursday, February 14th, 2019
உயர்தர மாணவர்களுக்கு ரப் கணினி வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பரீட்சார்த்தத் திட்டம் 3 மாதங்களில் அனைத்து 1ஏபி தரப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
உயர்தர மாணவர்களுக்கு ரப் கணினிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படவுள்ளன. நவீன கல்வியில் பன்னாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப பாடசாலைக் கல்வியை உருவாக்கும் அரச வேலைத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
Related posts:
உள்ளூராட்சி தேர்தல்: 11 முதல் 14 வரை வேட்பு மனு ஏற்பு!
இடியுடன் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு !
|
|
|


