27 ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது!
Saturday, May 22nd, 2021நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் 21 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்டதை போன்று இந்த நடமாட்ட கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையிலேயே புகையிரத திணைக்களம் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மழையுடன் கூடிய காலநிலை : நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு!
நாட்டை கட்டியெழுப்ப ஆராய்ச்சித் துறைகளின் ஒத்துழைப்பு தேவை!
விவசாய, கடற்றொழில் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி - கமநல காப்புறுதி சபை...
|
|