பாடசாலை மாணவர்களின் சீருடை வெளச்சர் காலம் நீடிப்பு!
Thursday, January 11th, 2018
சீருடை துணிகளை பெற்றுக் கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெளச்சர்கள் இம்மாதம் இறுதிவரை ஏற்றுக் கொள்ளப்படுமென கல்வி அமைச்சுஅறிவித்துள்ளது.
வவுச்சர்களைப் பெற முடியாமல் போன மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள சிரமத்தை கருத்திற் கொண்டு வெளச்சர்கள் பெறுமதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டு அமுலில் இருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் வெளச்சர் மூலம் துணிகளை பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டிருந்த காலம் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச பதவிகளில் 8000 பட்டதாரிகள்!
நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை!
சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து நாட்டை மீட்டெடுக்கும் துணிச்சலான தலைவர் ரணில் - யாழ் மாநகரின் முன்ன...
|
|
|


