25,000 தண்டம் தொடர்ந்தும்  தாமதம்!

Thursday, December 28th, 2017

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ரூ. 25,000 தண்டப்பணமானது அமுலுக்கு வர தாமதமாவதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய மன்றம் தெரிவித்துள்ளது.

சட்ட வரைவாளர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் இன்னும் பூர்த்தியாகாமையே குறித்த தாமதத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு குறித்த நடவடிக்கைகள் சட்ட வரைவாளர் திணைக்களத்தினால் நிறைவுறும் பட்சத்தில் உடனடியாக போக்குவரத்து அமைச்சரினால் வர்த்தமானியில் வெளியிட உள்ளதாகவும் குறித்த மன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: