2019 ஆம் ஆண்டில் அறநெறி கல்வி கட்டாயம்!
Saturday, December 9th, 20172019 ஆம் ஆண்டளவில் தாம் பாசல என்ற அறநெறிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி விக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெறும் புத்தசாசன அமைச்சிக்கான வரவு செலவு திட்ட நிதி ஓதுக்கீட்டு விவாதத்தில் அமைச்சர் உரையாற்றினார்.இவர் மேலும் உரையாற்றுகையில்,
பௌத்த கோட்பாடு சிந்தனைகளை உலகில் முன்னெடுக்கும் கேந்திர நிலையமாக இலங்கையை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். கொள்கையை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்கமுடியாவிட்டால் எமது பொருளாதார வளர்ச்சியைமேம்படுத்த முடியாது. பாராளுமன்றத்தில் தியான வகுப்பொன்றை ஏற்படுத்த வேண்டும். கொள்கையை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்ப பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
புதிய கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு – முதற்கட்ட பணி பூர்த்தி!
உள்ளூராட்சி மன்றங்கள் அமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கை!
சுயலாப கொள்ளையர்களால் எமது உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாது - ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர...
|
|