2018 ஆம் ஆண்டு 3 பில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன மின்சார கட்டமைப்பு : மோசடிகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

Tuesday, August 18th, 2020

நாடுமுழுவதும் நேற்று பிற்பகல் 12.35 மணியளவில் மினசார தடை ஏற்பட்டமைக்கு முக்கிய காரணம் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என கூறப்படுகின்றது. எனினும் அதற்கு மேலதிகமாகவும் சில பிரச்சினைகள் இருக்கலாம் என மின்சார சபையின் பொறியிலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பத்தரமுல்ல பெல்வத்தையிலுள்ள மின்சார கட்டமைப்பு செயற்பட்டமை தொடர்பிலும் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி மார்ச் மாதம் 13ஆம் திகதி நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனையடுத்து 2018ஆம் ஆண்டு 3 பில்லியன் ரூபாய் செலவில் பெல்வத்தையிலுள்ள மின்சார கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்த கட்டமைப்பிலும் சில மோசடிகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் மின்சாரம் தடைப்படுவது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார்.

இதனிடையே நேற்று மதிய நேரத்தில் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டதுடன் தடைப்பட்ட மின்சார விநியோகம் வழமை நிலைக்கு திருப்ப நீண்ட நேரம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: