20 பேர் கொண்ட உயர் மட்ட அமெரிக்க இராஜ தந்திரிகள் குழு இலங்கை வருகை!

Wednesday, February 15th, 2023

உயர் பதவியில் உள்ள அமெரிக்க இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கட்டுநாயக்கவை வந்தடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன..

அமெரிக்காவின் மூத்த இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கொண்ட குழுவே நேற்று இலங்கை வந்துள்ளது.

கிரீஸில் இருந்து வந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சிறப்பு விமானங்களில் அவர்கள் இரவு 7 மணியளவில் இலங்கை வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் வருகையை முன்னிட்டு விமான நிலைய பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: