2 இலட்சம் சிமெந்து மூடைகள் இலங்கை வருகை – சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!
Thursday, January 27th, 2022
2 இலட்சம் சிமெந்து மூடைகளைத் தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளையதினம் நாட்டை வந்தடைய உள்ளதாக, சிமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
6 இலட்சம் சிமெந்து மூடைகளைத் தாங்கிய இரண்டு கப்பல்கள் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், சந்தையில் அதிகரித்துள்ள கேள்வி காரணமாக, சில பகுதிகளில் சிமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக நகர் மற்றும் நகர வீடமைப்புத் திட்ட நிர்மாணம் உள்ளிட்ட ஏனைய தனியார்த்துறை கட்டுமானப் பணிகளுக்காக அதிக கேள்வி உள்ளதாக சிமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைத்தியசாலை ஊழியர்களுக்க உத்தியோகபூர்வ வீடமைப்புத் திட்டம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
கிராம உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ் பாதுகாப்பு – பிரதமர் ஆலோசனை!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று ஆரம்...
|
|
|


