2 ஆயிரத்து 888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956 பரீட்சார்த்திகள் – புலமைப்பரிசில் பரீட்சை வெற்றிகரமாக நிறைவுற்றதாக பரீட்சை ஆணையாளர் அறிவிப்பு!

Sunday, October 15th, 2023

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்றையதினம் நடைபெற்று முடிந்துள்ளது குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளின் மன ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உளவியலாளர் வைத்தியர் ரூமி ரூபன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக, உரிய பரீட்சை நிலையத்திற்கு செல்ல முடியாத மாணவர்கள், அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: