150 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் கொள்வனவு!

Friday, June 2nd, 2017

ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் விநியோகிப்பதற்காக 150 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் கொள்வனவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கூட்டுறவு மொத்த விற்பனவு நிலையத்தின் ஊடாக கொள்வனவு செய்து, சதொச கிளைகள் ஊடாக விநியோகிப்பது தொடர்பாபில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சவுதி அரேபிய அரசாங்கம் வழங்கிய 150 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் குறித்த காலத்திற்கு போதாது என்பதால் மேலதிகமாக 150 மெற்றிக்கொன் பேரீச்சம்பழங்களை கொள்வனது செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: