13 – 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு ஏற்படுத்தப்படமாட்டாது! – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
Friday, April 8th, 2022
சித்திரை புத்தாண்டு தினங்களான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தற்போது பெற்றுக் கொள்ளப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீர் மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நேற்று ஓரளவு மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக இந்த வாரத்தை விட எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு காலம் மேலும் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் விரைவில் புதிய சட்டம்!
நியூயோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் - நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது தொடர்பில் உரை!
எவ்வித அழுத்தங்கள் வந்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் நிறுத்தப்படமாட்டாது - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச...
|
|
|


