வெட்டுபுள்ளி முறையில் மாற்றம் – அமைச்சரவை அனுமதி!
Thursday, December 12th, 2019பல்கலைகழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளி முறையில் புதிய நடைமுறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அந்தவகையில் மாவட்ட ரீதியிலான முறைக்கு பதிலாக, பாடசாலை ரீதியில் வெட்டுப்புள்ளி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
தற்போது மாகாண, மாவட்ட மற்றும் பாடசாலை ரீதியில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வியினை வழங்குவதில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாகவே இந்த புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்துவதற்காக கல்விமான்கள் உள்ளடங்கிய குழு ஒன்றினை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
முச்சக்கர வண்டியின் கட்டண சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது..
ஓலைக் குடிசைகளில் இருக்கும் எமக்கு நிரந்தர வீடுகளை பெற்றுத்தாருங்கள் - ஈ.பி.டி.பியிடம் அரியாலை மேற்க...
அறநெறிப் பாடசாலை பாடத்திட்டத்தில் யோகா - இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் !
|
|