வெட்டுபுள்ளி முறையில் மாற்றம் – அமைச்சரவை அனுமதி!
Thursday, December 12th, 2019
பல்கலைகழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளி முறையில் புதிய நடைமுறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அந்தவகையில் மாவட்ட ரீதியிலான முறைக்கு பதிலாக, பாடசாலை ரீதியில் வெட்டுப்புள்ளி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
தற்போது மாகாண, மாவட்ட மற்றும் பாடசாலை ரீதியில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வியினை வழங்குவதில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாகவே இந்த புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்துவதற்காக கல்விமான்கள் உள்ளடங்கிய குழு ஒன்றினை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
அரசியல் குழப்பம் - பலாலி விமான நிலைய புதுப்பித்தல் தாமதம்!
சிறுவர் தினத்தின் இலக்கை அடைவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு - இலங்கை வருகிறார் சுப்ரமணியன் சுவாமி!
|
|
|


