மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பித்தள்ளன.
இதேவேளை, உயர்தர பரீட்சையின் முதற்கட்ட திருத்தப்பணிகள் இடம்பெறும் 12 பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு றோயல் கல்லூரி, நாலந்தா கல்லூரி, இந்து கல்லூரி, களுத்துறை ஞானோதய மகா வித்தியாலயம், இரத்தினபுரி மிஹிந்து வித்தியாலயம், குருணாகல் சாந்த ஹானா வித்தியாலயம், கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி, விஹாரமஹாதேவி மகளீர் கல்லூரி, சீதாதேவி மகளீர் கல்லூரி, காலி வித்யாலோக கல்லூரி, பதுளை விஹாரமஹாதேவி மகளீர் கல்லூரி மற்றும் ஊவா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
Related posts:
உரிமைப் போராட்டத்தை தோழமையுடன் வளர்க்க அயராது உழைத்தவர் அமரர் மங்கையர்க்கரசி அம்மையார் –ஈ.பி.டி.பியி...
மேதினம்: போக்குவரத்து சபையிடம் 5,000 பஸ்கள் கோரிக்கை!
இந்தவார இறுதிக்குள் எரிவாயு விபத்து தொடர்பில் தர பகுப்பாய்வு அறிக்கை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அ...
|
|