புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் ஆரம்பம்: பெறுபேறுகள் ஓகஸ்ட் 5 வெளிவரும்!
Friday, August 16th, 20192019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் நேற்று (15) ஆரம்பாகியுள்ளன.
வினாத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
39 பாடசாலைகளில் வினாத்தாள் திருத்தப் பணிகள் இடம்பெறவுள்ளதுடன், இந்த பணிகளில் 6976 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் குறித்த வினாத்தாள்கள் திருத்தம் பணி நிறைவடைந்ததும் அதன் பெறுபேறுகளை ஒக்ரோபர் மாதம் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக பரீட்சை திணைகக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு - ஐரோப்பிய ஒன்றியம்!
இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர்!
போதைப்பொருள் தொடர்பாக தகவல்கள் வழங்குவதற்கான விஷேட பிரிவு - பொலிஸ் தலைமையகம்!
|
|