பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் அரச வைத்தியர்கள்!
Friday, October 11th, 2019எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தொழிற்சங்க போராட்டம் ஒன்றில் ஈடுபடபோவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள தீர்மானங்களை செயற்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் சட்டவிரோத இடமாற்றங்கள் தொடர்பில் தமது சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட்டதாகவும் அதனை கருத்திற்கொண்டு சகல இடமாற்றங்களையும் இரத்து செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டில் பாரிய நிதி நெருக்கடி: பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
யாழ். பல்கலை பீடங்கள் இடைநிறுத்தம் !
சட்டவிரோதமாக விமானத்தில் கடத்தப்படும் சுறா மீன் இறகுகள்?
|
|