தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை !

Wednesday, June 5th, 2019


நாட்டில் தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருவதனால், டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 19 ஆயிரத்து 215 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுள் 19 உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, டெங்கு மேலும் பரவுவதற்கு ஏதுவாக உள்ள சுற்றுச் சூழலை சுத்தம் செய்து பேணுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts: