ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய!

Sunday, October 6th, 2019


நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

நாளையதினம் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று சுபநேரத்தில் வேட்புமனு பத்திரத்தில் கையெழுத்திட்டார். இது தொடர்பான நிகழ்வு மிரிஹெனயிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts:

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் தேவைப்பாடுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் துவிச்சக்க...
அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யும் அமைச்சர்கள் - எம்.பி.க்களுக்கு எதிராக நடவட...
காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு - கிளிநொச்சியில் பதற்றம...