ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு!
Sunday, October 13th, 2019ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 73 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 09 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று (12) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 84 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை - கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
இதுவரை 15 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவிப்பு!
நாட்டின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் கூட்டுப்பொறுப்புள்ளது - குறைகளை மட்டும் விமர்சிப்பது அவர்க...
|
|