ஜனாதிபதியின் அவசர பணிப்புரை!
Wednesday, October 16th, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபைச் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய ஜனாதிபதி வேட்பாளர்களால் கோரப்படும் வகையில் அவர்களுக்குத் தேவையான உயர்ந்தபட்ச பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்புத் துறை பிரதானிகளுக்கு ஜனாதிபதி அவசர பணிப்புரை விடுத்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றிரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கைவிடப்பட்ட நிலையில் அரச திணைக்கள கட்டடங்கள் - அறிக்கை கோருகிறது திறைசேரி !
இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டு...
அரசியலமைப்பு பேரவைக்கு நிமல் சிறிபாலவை பரிந்துரை செய்தார் ஜனாதிபதி!
|
|
|


