ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு!
Tuesday, October 15th, 2019
கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(14) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 588 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 565 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் மற்றும் 17 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் 15 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இது மக்களின் தவறல்ல : அதிகரித்த மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு!
பொதுமக்களின் கவனக்குறைவும் பொறுப்பின்மையுமே கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் - பொது சுகாதார பரிசோதகர்...
இலங்கையர்களை பணியில் இணைத்துக்கொள்ள ஜப்பான் ஆர்வம் - ஜப்பான் தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தெர...
|
|
|


