சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – பரீட்சைகள் ஆணையாளர்!
Monday, August 26th, 2019
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான ஒழுங்குகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சை இம்முறை பரீட்சைக்கு முன்னதாக அடுத்த மாதம் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்திற்கு பிரித்தானிய மகாராணி வாழ்த்து!
நாளை தேசிய துக்கதினம் பிரகடனம்!
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் - இலங்கை வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா!
|
|
|


