இம்மாத இறுதிக்குள் வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு!
Saturday, October 12th, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாத இறுதிக்கு முன்னதாக நிறைவுசெய்ய முடியும் என அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் பாதுகாப்புடன் இந்தப் பணிகள் இடம்பெறுவதாக அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஒரு கோடியே 70 இலட்சம் அளவான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சுத் திணைக்கள அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு தொழில்வாய்ப்பு!
புதிய வரி அறவீட்டு முறைமை ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு!
பலத்த காற்றுடன் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்...
|
|
|


