ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரச பணியாளர்கள் ஒழுக்காற்று நடவடிக்கை!

Wednesday, September 28th, 2022

ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரச பணியாளர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்துறை அமைச்சின் செயலாளரால் நேற்று இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்தாபனக் குறியீட்டின் பிரிவுகளின் 6 மற்றும் 7ஆம் அத்தியாயங்களின் விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் பொது அதிகாரிகள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே

பணிகளில் ஈடுபடும்போது, பொதுச் சேவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் ஆண் பெண் இருபாலருக்கும் பொருத்தமான மற்றும் அடக்கமான உடைகளை அணிய அனுமதிக்கும் வகையில் அரச அதிகாரிகளின் உடை தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே நேற்று இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கையின்படி ஆண்கள் நீள் கால்சட்டை மற்றும் சட்டை அல்லது தேசிய உடையை அணிய வேண்டும்.

அதே நேரத்தில் பெண்கள் புடவைகள். கண்டியன் (ஓசாரி) அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான மற்றும் அடக்கமான ஆடைகளை அணிந்து. பொது சேவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும்.

இதேவேளை பாராளுமன்றம், நீதிமன்றம், தேசிய அல்லது சர்வதேச விழாக்கள் அல்லது மாநாடுகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்குள் அரச அதிகாரிகள் தேசிய உடை அல்லது பரிந்துரைக்கப்பட்ட உடையை அணிந்திருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: